முஹிடின் : ஜொகூரைப் பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றும்

21எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஜொகூர் மாநிலம் பக்காத்தான் ஹராப்பான் கைவசமாகுமென்று முஹிடின் யாஷின் ஆருடம் கூறியுள்ளார்.

ஜொகூர் மக்கள் ‘பல்வேறு சம்பவங்களால்’ தற்போதைய பாரிசான் நேசனல் நிர்வாகத்தின் மீது விரக்தி அடைந்துள்ளனர் என்று பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் தலைவருமான முஹிடின் தெரிவித்தார்.

“ஜொகூர் மாநிலத்தில் அதிகப் பிரச்சனைகள் உள்ளன. அதனால் மக்கள் ஆதரவு பக்காத்தானுக்கு அதிகரித்துள்ளது. எங்கள் நோக்கம் ஜொகூரைக் கைப்பற்ற வேண்டும் என்பதே’, என்றார் அவர்.

“ஜொகூர் மக்களுக்குப் பாரிசானைவிட சிறந்ததொரு ஆட்சியை வழங்குவோம் என வாக்குறுதி அளிக்கிறோம்”, என்று இன்று நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் முஹிடின் தெரிவித்தார்.

முஹிடின் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் பற்றிய ஜொகூர் மந்திரி பெசார் காலிட் நோர்டினின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கையில் முஹிடின் இவ்வாறு கூறினார்.

மேலும், காலிட்டின் இந்தக் கருத்துகள் அவருக்கு ஏற்பட்டிருக்கும் ஏமாற்றங்களின் அறிகுறிகளே என்றும் முஹிடின் கூறினார்.