இஸா சாமாட் ஹோட்டல்கள் வாங்கிய விவகாரம் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டார்

 

Isaarrestedமலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பெல்டா முன்னாள் தலைவர் இஸா சாமாட்டை இன்று பிற்பகல் மணி 4.24 அளவில் கைது செய்தது.

பெல்டா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பொரேசன் வாங்கிய இரண்டு ஹோட்டல்கள் சம்பந்தமாக அவர் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கிடையில் லண்டனில் ஒன்றும் சரவாக்கில் ஒன்றும் வாங்கியது சம்பந்தமாக எம்எசிசி, புத்ராஜெயாவில் இன்று அவரிடமிருந்து வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்த 2 மணி நேரத்திற்குப் பின்னர் அவரைக் கைது செய்தது.

பின்னர் தொடர்பு கொண்ட போது, எம்எசிசி துணை ஆணையர் அஸாம் பாக்கி கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

இஸா எம்எசிசி தலைமையகத்திற்கு இரண்டு வழக்குரைஞர்களுடன் வந்தார். ஆனால், அவர் மட்டுமே அலுவலகத்திற்குள் சென்றார்.