சிஎம்-களும் எம்பி-களும் பள்ளி வருகைக்கு கல்வி அமைச்சின் அனுமதி பெற வேண்டும்

cmமந்திரி  புசார்களும்   முதலமைச்சர்களும்    பள்ளிக்கூடங்களுக்கு   வருகை  மேற்கொள்ள    நினைத்தால்  முன்கூட்டியே  கல்வி   அமைச்சின்   அனுமதியைப்  பெற   வேண்டும்   என   பினாங்குக்   கல்வித்துறை   இயக்குனர்    ஷாரி  ஒஸ்மான்  இன்று   கூறினார்.

மாநிலத்   தலைவர்கள்   பள்ளிகளுக்கு   வருகை   புரிவதற்குமுன்   கல்வி   அமைச்சரின்   அனுமதியைப்  பெறுவதுதான்   வழக்கம்  என்றாரவர்.

“நாங்கள்  பள்ளிகளின்  நலனைக்  கவனிக்க    வேண்டியுள்ளது.   பொதுமக்களாக   இருந்தால்கூட    மாநிலக்  கல்வித்துறையின்   அனுமதியைப்  பெற   வேண்டும்.  அவர்கள்  சம்பந்தப்பட்ட  பள்ளியின்   பெற்றோர்-ஆசிரியர்  சங்க   உறுப்பினர்களாக   இருந்தால்  தேவையில்லை.  ஆனால்,  பள்ளிகள்   திறந்த  தினம்   கொண்டாடும்போது   அனுமதி  பெறாமல்    அவர்கள்   செல்லலாம்”,  என்று   ஜார்ஜ்டவுனில்    அவர்  கூறினார்.

புக்கிட்  மெர்தாஜாம்,   சுங்கை   லெம்புவில்   சீனப்   பள்ளி  ஒன்றுக்குள்  நுழைய  அனுமதிக்கப்படவில்லை    என்று    பினாங்கு   முதலமைச்சர்   லிம்   குவான்   கூறியிருப்பதற்கு    எதிர்வினையாற்றியபோது   ஷாரி   அவ்வாறு   கூறினார்.