அதிகாலையில் சமயப் பள்ளியில் ஏற்பட்ட தீயில் 24 பேர் மாண்டனர்

 

Earlymoringfireகோலாலம்பூர், டத்தோ கெராமாட்டிலுள்ள ஒரு சமயப் பள்ளியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீயில் 24 பேர் மாண்டனர்.

இறந்தவர்களில் 22 பேர் மாணவர்கள். மற்ற இருவரும் பள்ளியின் வார்டன்கள் என்று மாநகர் தீ மற்றும் மீட்பு சேவைகள் இலாகாவின் தகவல் கூறுகிறது.

மேலும், காயமடைந்த 11 பேர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகின்றனர்.

அச்சமயப்பள்ளியின் இரண்டாவது மாடியில் காலை மணி 5.10 அளவில் தீ பற்றியதாக நம்பப்படுகிறது.

சம்பவம் நடந்த இடத்திற்கு 36 பேர் அடங்கிய தீயணைப்பு படையினர் உடனடியாக அனுப்பப்பட்டனர். சுமார் காலை மணி 6.15 அளவில் தீ அணைக்கப்பட்டது.

தீ தொடங்கியதாக கருத்தப்படும் இரண்டாவது மாடி முற்றிலும் எரிந்து விட்டது. தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.