நஜிப்: மலேசியர்களின் ஒற்றுமைக்கு 1மலேசியா நெகாராகு ஒரு புதிய விடியல்

 

1mnegarakuமலேசியர்களை ஒன்றுபடுத்துவதற்கு 1மலேசியா நெகாராகு பொதுக்கொள்கை ஒரு புதியத் தொடக்கமாக வரக்கூடும் என்று பிரதமர் நஜிப் கூறுகிறார்.

இப்பொதுக்கொள்கையின் கீழ் மக்கள் ஒற்றுமையின்மைக்கு ஊக்கமளிக்கும் சிந்தனைகளை வீசியெறியந்து விட்டு மலேசியா அனைவருக்கும் சொந்தமானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

1மலேசியா நெகாராகுவின் கீழ் மக்கள் தங்களுக்கிடையிலான வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, ஒன்றுபட்டு நாட்டின் சுபிட்சத்தை நிலைநிறுத்துவார்கள் என்பதோடல்லாமல் அவர்கள் நம் நாட்டைப் பற்றி பெருமைப்படுவார்கள் என்று தாம் நம்புவதாக நஜிப் அவரது நஜிப்.ரசாக்.கோம் வலத்தளத்தில் இன்று பதிவு செய்துள்ளார்.