அனுவார்: இன அரசியலுக்கு டிஏபியே காரணம் என்பதை வரலாறு காண்பிக்கிறது

annuarஇன  அரசியல்   தோன்றியதைத்   தெரிந்துகொள்ள   வரலாற்றைத்    திரும்பிப்  பார்க்க    வேண்டும்   என்கிறார்   அம்னோ  தகவல்   தலைவர்   அனுவார்  மூசா.

இன  அரசியல்  உருவானதற்குக்   காரணமே   டிஏபிதான்   என்கிறார்   அவர்.  அக்கட்சி  தோற்றுவிக்கப்பட்டதைத்   தொடர்ந்து    இன  அரசியலும்  தோன்றியது.

“டிஏபி   தோன்றுவதற்கு   20  ஆண்டுகளுக்கு  முன்பே   அம்னோ   உருவாகிவிட்டது…..அப்போதெல்லாம்   இனங்களுக்கிடையில்    நல்லிணக்கம்   நிலவியது.

“சிங்கப்பூர்   பிரிந்து    சென்றதும்  பிஏபி-இலிருந்து    உருவானது    .  டிஏபி  தேர்தலில்  போட்டியிடத்   தொடங்கியதிலிருந்து   பல்வேறு  இன   விவகாரங்களை  எழுப்பி  அரசியலாக்கியது”,  என்றவர்   சொன்னதாக  அம்னோ   ஆன்லைன்   கூறியது.