சுப்ரா: இருக்கை பரிமாற்றம் குறித்து பிஎன்னுடன் விவாதிக்க மஇகா தயார்

 

எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் இருக்கைகளைப் பரிமாற்றம் செய்துகொள்வதற்கு பாரிசான் நேசனல் பங்காளித்துவக் கட்சிகளுடன் விவாதிக்க மஇகா தயாராக இருப்பதாக அதன் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறுகிறார்.

தற்போது பின்பற்றப்பட்டு வரும் இருக்கை ஒதுக்கீட்டு முறை நிலைநிறுத்தப்பட வேண்டும், ஏனென்றால் எந்த ஒரு மாற்றமும் இந்த முறையில் மற்றும் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரியத்தில் சிக்கல்களை உண்டாக்கும் என்றாரவர்.

இதுவரையில் கைவசமிருக்கும் இருக்கைகளை விட்டுக்கொடுக்கும் திட்டம் ஏதும் இல்லை. ஆனால், இருக்கைகள் பரிமாற்றம் செய்துகொள்வது பற்றி நாம் பேசலாம். மஇகா தயார். ஆனால், அது கட்சி போட்டியிடவிருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றியதாக இருக்காது என்றாரவர்.

நாம் ஒரு நல்ல தீர்வு காண்போம். அது தீர்க்கப்படலாம் என்று நான் நம்புகிறேன் என்று அவர் இன்று மஇகா மத்திய செயற்குழுவின் கூட்டத்திற்குப் பின்னர் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.