அமைச்சர் : ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்குப் பின், சுமார் 300 பொருள்களின் விலை குறைந்துள்ளது

ஏப்ரல் 2015-ல், பொருள், சேவை வரி அமல்படுத்தப்பட்டதில் இருந்து, கண்காணிக்கப்பட்ட 1,396 பொருள்களில், சுமார் 16% முதல் 26% வரை விலை குறைந்துள்ளது.

உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சு, பாஸ் – குபாங் கிரியான் எம்.பி. அஹ்மத் பாயாகி அட்டிகுலா எழுப்பிய கேள்விக்கு, எழுத்து பூர்வமாக இவ்வாறு பதிலளித்துள்ளது. பிரதமர் நஜிப் ரசாக் கூறியதுபோல், தற்போது சந்தையில் மலிவாக விற்கப்படும் பொருள்களின் சதவீதத்தை, அமைச்சு அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இருப்பினும், அந்த 300 பொருள்களின் பட்டியலை அமைச்சு வெளியிடவில்லை. பொருள்களின் விலை உயர்வுக்கு ஜி.எஸ்.டி. மட்டும் காரணமல்ல, மாறாக, நாணய மாற்று விகிதங்கள், பொருள்களின் உற்பத்தி, வானிலை மற்றும் எண்ணெய் விலை போன்றவையும் ஒரு பொருளின் விலையை நிர்ணயிப்பதாக அமைச்சு நினைவூட்டியது.

2015-ஆம் ஆண்டு மே மாதம், ஜிஎஸ்டி நடைமுறைபடுத்திய பின்னர், பொருள்களின் விலை வீழ்ச்சியை மக்கள் உணருவர் என்று துணை அமைச்சர் அஹ்மாட் மஸ்லான் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.