ஜி25: கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு சரியே

பணி ஓய்வு  பெற்ற  உயர்  அரசு  அதிகாரிகளைக்  கொண்ட  குழுவான   ஜி25,  எம்.இந்திரா  காந்தி   வழக்கில்   உச்ச  நீதிமன்றம்   “பெற்றோர்”   என்ற  சொல்லுக்கு  அளித்த   பொருள் விளக்கத்தையும்   ஷியாரியா   நீதிமன்றத்தின்  எல்லை  எது  என்பதைத்   தெளிவுபடுத்தியிருப்பதையும்   பாராட்டியுள்ளது.

“கூட்டரசு    நீதிமன்றம்     அரசமைப்பின்  பகுதி  12(40)- இல்  இடம்பெற்றுள்ள   ‘பெற்றோர்’  என்ற  சொல்  ஒரு  குழந்தையின்   தாய்,  தந்தை  ஆகிய   இருவரையும்   குறிக்கும்     என்று   சரியான   விளக்கத்தையே   கொடுத்துள்ளது.

“அதேவேளை   ஷியாரியா   நீதிமன்றத்தின்  அதிகார  எல்லை  எது   என்பதையும்   அது   தெளிவுபடுத்தியுள்ளது”,  என  அக்குழு   இன்று   ஓர்    அறிக்கையில்   கூறியது.