பதிவு செய்துகொள்ளாதிருக்கும் குடியேறிகளுக்கு எதிராக ‘ஓப்ஸ் மெகா 2.0’ நடவடிக்கை

குடிநுழைவுத்   துறை   பதிவு  செய்துகொள்ளாதிருக்கும்   குடியேறிகளுக்கு   எதிராக  “ஓப்ஸ்  மேகா  2.0”  நடவடிக்கையைத்   தொடங்கியுள்ளது.

அதன்கீழ்   இதுவரை   1725  பேர்   சோதிக்கப்பட்டு  604பேர்   கைது   செய்யப்பட்டுள்ளனர்.

முதலாளிகள்   அறுவரும்  கைது     செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பிப்ரவரி  19இல்  குடிநுழைவுத்  துறை  தலைமை  இயக்குனர்   முஸ்தபார்  அலி   தலைமையில்   முதலாவது   அதிரடிச்  சோதனை   சிலாங்கூர்,  பந்திங்கில்  உள்ள  ஒரு  ‘கொங்சி’  வீட்டில்   மேற்கொள்ளப்பட்டது.

“18  பேரைச்  சோதனை   செய்ததில்  15 பேர்  கைது   செய்யப்பட்டனர்- எண்மர்  இந்தியாவைச்  சேர்ந்தவர்கள்,   மூவர்   இந்தோனிய   ஆடவர்கள்,  நால்வர்   இந்தோனேசிய  பெண்கள்.  அவர்கள்  சட்டப்பூர்வ   ஆவணங்கள்  வைத்திருக்கவில்லை”,  என  முஸ்தபார்  ஓர்    அறிக்கையில்   கூறினார்.

அதே  இரவில்    அவர்     சிலாங்கூர்  டிங்கிலிலும்  ஒரு  சோதனை  நடவடிக்கையை  மேற் கொண்டார்.

அதில்  214  பேர்  சோதனை  செய்யப்பட்டதில்   43பேர்  சிக்கினர். அவர்களில்  25பேர்  வங்காள  தேசிகள்,  19பேர்  இந்தோனேசிய  ஆடவர்கள்,  மூவர்  பெண்கள்.

கைதான  அனைவரும்  நெகிரி  செம்பிலான்  லெங்கெங்  போலீஸ்  முகாமில்  வைக்கப்பட்டுள்ளனர்.