ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டது தேர்தல் விரைவில் என்பதற்கு அறிகுறியா?

தேர்தல்   ஆணையம்  சாபாவில்    தனியார்  நிறுவனங்களின்  ஹாலிகாப்டர்கள்  அனைத்தையும்      ஏப்ரல்,  மே   மாதங்களுக்கு   வாடகைக்கு    எடுத்துக்  கொண்டிருப்பதாக   த  ஸ்டார்   ஆன்லைன்   அறிவித்துள்ளது.

சாபாவின்  இரண்டு  ஹெலிகாப்டர்   நிறுவனங்களும்   இத்தகவலைத்    தெரிவித்தனவாம்.

ஹெலிகாப்டர்கள்   வாடகைக்கு    எடுத்துக்கொள்ளப்பட்டதை   வைத்து    அம்மாதங்களில்   தேர்தல்    நடத்தப்படும்    என்ற  முடிவுக்கு   வந்து  விடக்கூடாது. அதேவேளை   ஏப்ரல்,  மே   மாதங்களில்   தேர்தல்   நடத்தப்படும்    சாத்தியம்   இருப்பதையும்  மறுக்கவியலாது.

மக்களவை   மார்ச்  5-இல்  தொடங்கி   ஏப்ரல்  5வரை   20  நாள்களுக்கு    நடைபெறத்   திட்டமிடப்பட்டுள்ளது.

மே  15இல்  நோன்பு  மாதம்    தொடங்குவதால்   அதற்கு  முன்னதாக   தேர்தலை   நடத்தத்தான்    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   விரும்புவார்   என   அரசியல்  பார்வையாளர்கள்   கூறுகின்றனர்.

அதுவும்   நிச்சயமில்லை.  2016-இல்   இரண்டு   இடைத்   தேர்தல்கள்   ரமலான்  மாதத்தில்    நடத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்றம்  ஜூன்  24-இல்  இயல்பாகவே  கலைந்துவிடும்.  அதன்  பின்னர்  ஆகஸ்ட்  24குக்குள்  இசி   தேர்தலை    நடத்தியாக    வேண்டும்.