சைபுடின்: மலேசிய- சிங்கப்பூர் உறவுகள் மிக நல்ல நிலையில்

மலேசிய     வெளியுறவு   அமைச்சர்     சைபுடின்  அப்துல்லா   மலேசியாவுக்கும்  சிங்கப்பூருக்குமிடையில்   இருதரப்பு   உறவுகள்   நல்ல   நிலையில்   இருப்பதாகக்   கூறுகிறார்.

இரு  நாடுகளுக்குமிடையில்  அதிவேக  இரயில் (எச்எஸ்ஆர்)  திட்டம்,  1962  நீர்  ஒப்பந்தம்  போன்ற  விவகாரங்களுக்கு   இன்னும்   தீர்வு   காணப்படவில்லை    என்றாலும்   நல்லுறவுகளை  நிலைநாட்ட  அவை   தடங்கல்களாக   இருந்துவிடக்கூடாது   என்பதை  இரு  நாடுகளும்  உணர்ந்திருப்பதாக  அவர்  கூறினார்.

மலேசியாவும்   சிங்கப்பூரும்   இருதரப்பு   உறவுகளை   மேம்படுத்திக்  கொள்ளவே   விரும்புகின்றன  என  சைபுடின்  சொன்னார்.

சைபுடின்   அவரின்   சிங்கப்பூர்  சகா  டாக்டர்  விவியன்  பாலக்கிருஷ்ணன்   அழைப்பின்பேரில்   சிங்கப்பூருக்கு   அவரது  முதலாவது   அதிகாரத்துவ   பயணத்தை   மேற்கொண்டிருக்கிறார்.

இரண்டு   நாள்  பயணம்   மேற்கொண்டுள்ள    அவருடன்  மலேசிய   வெளியுறவு   அமைச்சு  அதிகாரிகளும்   சென்றுள்ளனர்..