சுல்கிப்ளி: பாலியல் தொல்லைச் சம்பவத்தை விசாரிக்க சுயேச்சைக் குழு

ஒரு  மருத்துவமனையில்   எலும்பியல்  சிகிச்சைப்  பிரிவின்  தலைவர்   பாலியல் தொல்லை  கொடுத்ததாகக்   கூறப்படுவதை  விசாரிக்க  சுயேச்சைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்   சுல்கிப்ளி அகமட் கூறினார்.

அக் குழுவில், சுகாதார அமைச்சு, மகளிர்,குடும்ப,சமூக மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றையும்     மற்ற   துறைகளையும்  சேர்ந்த   பேராளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முன்சொன்ன  பாலியல் தொல்லை வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து  மேலும்  பல   மருத்துவர்கள்,  பயிற்சி   மருத்துவர்கள்  உள்பட,   தங்களுக்கு   ஏற்பட்ட   பாலியல்   தொல்லைகள்   குறித்து    புகார்    செய்ய   முன்வந்திருப்பதாக  அமைச்சர்    தெரிவித்தார்.

“பணி  இடத்தில்    இது போன்ற தொல்லைகளுக்கு ஆளாவோர்  சுகாதார  அமைச்சருக்கு  நேரடியாக     புகார்களை   அனுப்புமாறு  சுகாதார  அமைச்சு  கேட்டுக்கொள்கிறது”,  என  சுல்கிப்ளி   இன்று  ஓர்   அறிக்கையில்   கூறினார்.