சிஐஎ கடிதத்திற்கும் நஜிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் ஒற்றர் துறை முன்னாள் தலைமை இயக்குனர்

 

மே 9 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக சிஐஎ-க்கு எழுதப்பட்ட கடிதம் சம்பந்தமாக மலேசிய வெளிநாட்டு ஒற்றர் அமைப்பின் (எம்இஐஒ) முன்னாள் தலைமை இயக்குனர் ஹசானா அல்துல் ஹமிட் இன்று ஒரு போலீஸ் புகார் செய்துள்ளார்.

அவருடைய வழக்குரைஞர்களுடன் சென்ற அவர் கோலாலம்பூர் டிரவர்ஸ் போலீஸ் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்தை புகார் செய்வதில் கழித்தார்.

பின்னர் சந்தித்த போது, “அக்கடிதத்திற்கும் நஜிப்புக்கும் (முன்னாள் பிரதமர்) எந்தத் தொடர்பும் இல்லை” என்று கூறியதற்கு மேல் எதுவும் கூற மறுத்து விட்டார்.

இன்று பின்னேரத்தில் அவரது வழக்குரைஞர்கள் அவர்களுடைய செந்துல் அலுவலகத்தில் ஓர் ஊடகச் சந்திப்பை நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஹசானா அங்கிருக்கமாட்டார்.