ஶ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

ஶ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் ஷஹாருடின் படாருட்டின் சற்றுமுன்னர் காலமானார்.

இன்று மாலை 6:28 மணியளாவில் அவரின் இறுதி மூச்சு நின்றதாக, அவரின் செயலாளர் ஜஃப்ருல்லா அரிஸ் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான அன்னாரின் உடல், டேசா பெங்கிரின் புத்ராவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, நாளை அடக்கம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஷஹாருடினுக்குப் பெருங்குடல் புற்றுநோய் இருந்ததாக, நேற்று ஒரு சீன செய்தித்தாள் செய்தி வெளியிட்டிருந்தது.

அவரின் மரணத்தை அடுத்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.

14-வது பொதுத் தேர்தலில், ஷஹாருடின் 29,250 வாக்குகளைப் பெற்று, ஶ்ரீ செத்தியா தொகுதியில் வெற்றிபெற்றார்.