சிலாங்கூருக்கும் பினாங்குக்கும் தண்ணீர் விற்கத் தயாராகிறது பேராக்

பேராக்  அதன்   இரண்டு   அண்டை   மாநிலங்களான   சிலாங்கூருக்கும்  பினாங்குக்கும்   தண்ணீர்  விற்பனை    செய்வது  மீதான   பேச்சுகளைத்    தொடங்க  விருப்பதாக   மந்திரி   புசார்   அகமட்   பைசல்   அஸுமு   கூறினார்.

பேச்சுகள்  வெற்றிகரமாக   அமைந்தால்    மாநில   அரசாங்கம்  ஒரு  பொருத்தமான  இடத்தை  அடையாளம்   கண்டு  அதில்   சிலாங்கூர்  மற்றும்  பினாங்குக்கு  விற்பனை   செய்வதற்கான  தண்ணீரைச்   சுத்திகரிக்க  ஆலை  ஒன்றைக்  கட்டும்.

நீரின்  விலை  பற்றி   வினவியதற்கு,  பேராக்   தண்ணீர்  வாரியமும்   மாநிலப்  பொருளாதாரத்   திட்டப்  பிரிவும்    அதை   ஆராய்ந்து   வருவதாக  பைசல்   கூறினார்.

மாநில   அரசின்  தண்ணீர்   விற்பனைத்   திட்டம்    குறித்து    நீர்,  நிலம்,  இயற்கை  வள   அமைச்சர்    டாக்டர்   சேவியர்   ஜெயக்குமாரிடம்  தெரிவித்து  விட்டதாகவும்   அவர்   சொன்னார்.