சில்மிஷம் செய்த மருத்துவர் மீதான அறிக்கை தயார்

கிள்ளான் பள்ளத்தாக்கில் மருத்துவமனை ஒன்றில் மூத்த மருத்துவர் ஒருவர் இளநிலை மருத்துவர்களுக்குப் பாலியல் தொந்திரவு கொடுத்ததாகக் கூறப்படும் புகார்மீது விசாரணை நடத்திய சுயேச்சைக் குழு அடுத்த வாரம் அதன் அறிக்கையைச் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கும்.

“பாலியல் தொந்திரவு மீதான விசாரணை பற்றி எனக்கு விளக்கப்பட்டது”, என்று அமைச்சர் கூறினார்.

“சுயேச்சைக் குழுவின் இறுதி அறிக்கைக்காகக் காத்திருக்கிறேன். மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றிய பரிந்துரைகளும் இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் தடுக்கும் ஆலோசனைகளும் அந்த அறிக்கையில் இருக்கும்”, என்றாரவர்.

சுயேச்சை விசாரணைக் குழுவின் அறிக்கை அமைச்சரவைக்குக் கொண்டு சென்று விவாதிக்கப்படும்.