அன்வாருக்காக காலி செய்யப்படும் தொகுதி: புதன்கிழமை அறிவிக்கப்படும்

பிகேஆர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதற்காக ஒரு நாடாளுமன்றத் தொகுதி காலி செய்யப்படவுள்ளது. அந்தத் தொகுதி எது என்பதை பிகேஆர் புதன்கிழமை அறிவிக்கும்.

இதை பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்ததாக பெர்னாமா கூறியது.

ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராகத் திரும்பி வரப்போதாக அன்வார் அடிக்கடிக் கூறி வந்துள்ளார். தனக்காக பிகேஆர் எம்பிகள் மூவர் அவர்களின் தொகுதிகளைக் காலி செய்து கொடுக்க முன்வந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.