நஜிப் வழக்கு விசாரணையில் அமெரிக்கப் பார்வையாளர்கள்

இன்று தலைநகரில் நடந்த, முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக் மீதான நீதிமன்ற விசாரணையில், அமெரிக்கப் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

நஜிப் குற்றம் சாட்டப்படுவதைப் பார்வையிட அமெரிக்க அதிகாரிகள் இருவர் நீதிமன்றத்தில் இன்று காணப்பட்டனர்.

அமெரிக்காவில் 1எம்டிபி சம்பந்தப்பட்ட பணமோசடி தொடர்பான ஒரு சிவில் வழக்கில், மலேசிய அதிகாரி 1 (MO1), பின்னர் நஜிப் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அதில், 1எம்டிபி-உடன் தொடர்புடைய சொத்துக்களை முடக்கம் செய்யவும் நீதித்துறை ஒரு கோரிக்கை மனுவை தாக்கல் செய்துள்ளது.