நஜிப்பின் தாயார் வீட்டில் போலீஸ் தீடீர் சோதனை

 

கோலாலம்பூர், ஜாலான் ஈட்டனிலுள்ள நஜிப்பின் தாயார் ராஹா முகமட் நோஆவின் வீட்டை போலீசார் இன்று மாலை திடீர் சோதனையிட்டனர்.

போலீஸ் வட்டாரத் தகவல்படி, பிற்பகல் மணி 4.00 அளவில் போலீசார் அந்தத் திடீர் சோதனையை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட அதே நேரத்தில் கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நஜிப் மீது பணச் சலவை சம்பந்தப்பட்ட 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

14 பேர் அடங்கிய அந்த திடீர் சோதனைக் குழுவினர் ரொக்கம் வீட்டின் கூரையில் மறைத்து வைத்திருக்கும் சாத்தியம் இருப்பதால் கூறையை உடைத்து தேடினர். ஆனால் ஒன்றும் அகப்படவில்லை.