பிடி இடைத் தேர்தல்: எண்மர் வேட்பு மனு தாக்கல்

போர்ட் டிக்சன் இடைத் தேர்தலுக்கு வேட்பாளர் நியமனம் காலை மணி 10க்கு முடிவுக்கு வந்தது. மொத்தம் எட்டு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

10 மணிக்கு தேர்தல் அதிகாரி கைரி மாமோர் வேட்பாளர் நியமனம் முடிவுக்கு வருவதாக அறிவித்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்த எண்மர்: பிகேஆர் தலைவராக தெரிவாகியுள்ள அன்வார் இப்ராகிம், பாஸின் முகம்மட் நஸாரி மொக்தார், முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் இசா முகம்மட் சமட்( சுயேச்சையாக போட்டியிடுகிறார்), லாவ் செக் யான் (சுயேச்சை), ஸ்டீவி சான் (சுயேச்சை), கீ சீ யுயென்(சுயேச்சை), முகம்மட் சைபூல் புகாரி அஸ்லான் (சுயேச்சை), ஏ. ராஜேந்திரா(சுயேச்சை).