அரசாங்க இயந்திரத்தைப் பரப்புரைகளுக்குப் பயன்படுத்துகிறார்: அன்வாரைச் சாடுகிறார்கள் சுயேச்சைகள்

போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் இருவர், அன்வார் இப்ராகிம் அவரது பரப்புரைகளுக்கு அரசாங்க இயந்திரங்களைப் பயன்படுத்துவதாக முறையிட்டுள்ளனர்.

அன்வார் உள்பட ஏழு வேட்பாளர்களில் ஐவர் சுதந்திரமான, நியாயமான தேர்தலை ஆதரிப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளதாக பெர்சே அறிவித்துள்ள வேளையில் இவ்வாறு குறைகூறப்பட்டுள்ளது..

“சில வேட்பாளர்களும் கட்சிகளும் பெர்சேயின் மூன்றாவது உறுதிமொழியைமீறி நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இராணுவத்திடம் பேசி இருக்கிறார்கள்.

“சமய உரை என்ற பெயரில் பரப்புரை செய்வதற்குப் பள்ளிவாசல்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்”, என சுயேச்சை வேட்பாளர் முகம்மட் சைபூல் புகாரி இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.