எம்பிகளும் சொத்துகளை அறிவிக்க வேண்டும்

அமைச்சர்கள்போல் எம்பிகளும் அவர்களின் சொத்து விவரங்களை அறிவிக்கக் கோரும் தீர்மானமொன்று அக்டோபர் 15-இல் மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.

கடந்த புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் அது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தீர்மானத்தைக் கொண்டுவரும் பொறுப்பு தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பக்கத்தான் ஹரப்பான் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லா கூறினார்.

“அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் எங்களின் சொத்து விவரங்களை அறிவித்து விட்டோம்..

“அதேபோன்று எல்லா எம்பிகளும் செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள்மீது நம்பிக்கை வரும். அது அதிகாரமீறல்கள் நிகழ்வதையும் தடுக்கும்”, என்றாரவர்.