பிடி கலை நிகழ்ச்சிக்கு ‘அதிகம்’ செலவிடப்படவில்லை

போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் அன்வார் இப்ராகிமின் பரப்புரைக்கு அரசாங்கப் பணம் பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் வலுத்து வரும் வேளையில், அங்கு நடைபெற்ற ஒரு கலைநிகழ்ச்சிக்கு அதிகம் செலவிடப்படவில்லை என்றும் அதற்கான பணம் ஒரு நன்கொடை நிறுவனத்திடமிருந்தும் “நண்பர்களிடமிருந்தும்” கிடைத்தது என்றும் அதன் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

அன்வாரும் அவரின் துணைவியார் துணைப் பிரதமர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் கலந்துகொண்ட அக்கலைநிகழ்ச்சிக்கான செலவை பெர்துபோஹான் கிட்மாட் கெபாஜிகான் மஷராகாட் மதானி(மதானி)யும் தனிப்பட்ட சிலரும் ஏற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அன்வாரும் வான் அசிசாவும் அதில் உரையாற்றினர். பிரபல கலைஞர்கள் ஹட்டான், எம்.நசிர், ஆவி முதலானோர் கலந்து கொண்ட அந்நிகழ்ச்சியை ஈராயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.