சாலை கட்டணம் இல்லாத சாலைகள் சாத்தியமல்ல, மகாதிர்

 

சாலை கட்டணம் விதிக்கப்படாத நெடுஞ்சாலைகள் சாத்தியமல்ல என்று பிரதமர் மகாதிர் கூறுகிறார்.

சாலை கட்டணம் இல்லாத நெடுஞ்சாலை என்று வாக்குறுதி அளிக்கும் பக்கத்தான் தேர்தல் அறிக்கைக்கு தாம் எதிர்ப்பு தெரிவித்ததாக அவர் கூறினார்.

நாம் அரசாங்கம் அமைக்கப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டு தேர்தல் அறிக்கையைத் தயாரித்தோம். ஆனால், நாம் இப்போது அரசாங்கமாக இருக்கிறோம். இந்தத் தேர்தல் அறிக்கை நமக்குப் பெரும் சுமையாக இருக்கிறது என்றாரவர்.

“நான் அப்போதே இதற்கு எதிராக இருந்தேன், லா. எனக்குத் தெரியும், இலவச சாலை… முடியாது. இலவச சாலையும் டோல்-கட்டணமும் இல்லாமல் இருக்க ஒரே வழி பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும்”, என்று நேற்று இந்தோனேசியா, பாலியில் ஆசியான் தலைவர்கள் கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியின் முடிவில் பெர்னாமா மற்றும் ஆர்டிஎம்மிடம் மகாதிர் கூறினார்.

மகாதிர் பிரதமர் பதவி ஏற்ற பின்னர் இது அவர் இந்தோனேசியாவுக்கு மேற்கொண்ட இரண்டாவது வருகையாகும்.