அன்வார்: இது ரோஸ்மாவின் பை போல் இருக்கிறதே!

இன்று பிடி நாடாளுமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள்.

பிடி பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் அன்வார் இப்ராகிம் காலை மணி 10 அளவில் குளோரி பீச் ரீசோர்ட், தாமான் தஞ்சோங்கில் நெகிரி செம்பிலான் பள்ளிகள் கூட்டுறவு கழகங்களின் வாணிக மேம்பாடு சிறப்பு திட்டம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க நெகிரி செம்பிலான் மாநிலம் முழுவதிலுமிருந்து வந்திருந்த 100 ஆசிரியர்களைச் சந்தித்து சுமார் 10 நிமிடங்களை அவர்களுடன் கழித்தார்.

அந்த ஆசிரியர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், அங்கிருந்தவர்களின் கைப்பை ஒன்றை எடுத்து இது முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மாவின் பை போல் இருக்கிறதே என்று கிண்டலாகக் கூறினார்.

அந்த நிகழ்சியின் ஏற்பாட்டாளர் அதில் கலந்துகொண்டுள்ள பிடி வாக்காளர்கள் நாளை முன்னதாகவே சென்று வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.