அன்வார் பிடி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றார்

 

போர்ட் டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தல் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் 23,560-வாக்கு பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவர் திங்கள்கிழமை நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, அன்வார் 31,016 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு அடுத்து பாஸ் கட்சியின் வேட்பாளர் முகமட் நஸாரி மொக்தார் 7,456 வாக்குகளைப் பெற்றார்.

மொத்த வாக்காளர்களில் 58.25 விழுக்காட்டினர் வாக்களித்தனர்..