மலாக்காவில் வழிபாட்டு இல்லங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது

சிலாங்கூரில் இந்து ஆலயமொன்றில் நிகழ்ந்த கலவரத்தைத் தொடர்ந்து மலாக்காவில் எல்லா வழிபாட்டு இல்லங்களிலும் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு மலாக்கா போலீஸ் தலைமையகம் எல்லா போலீஸ் மாவட்டங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று மலாக்கா போலீஸ் தலைவர் ராஜா ஷாரோம் ராஜா அப்துல்லா கூறினார்.

சுபாங் ஜெயா யுஎஸ்ஜே 25, ஸ்ரீமகாமாரியம்மன் ஆலய கலவரம் தொடர்பில் மலாக்கா போலீஸ் 71 புகார்களைப் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

37 புகார்கள் ஜாசின் மாவட்டத்தில் செய்யப்பட்டன. மலாக்கா தெங்காவில் 23, அலோர் காஜா மாவட்டத்தில் 11.

சமூக ஊடகங்களில் இன உணர்வுகளைத் தூண்டும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அது பொது ஒழுங்கைக் கெடுக்கும்.

-பெர்னாமா