கோவில் கலவரம்: 42 பேர் கைது

 

கடந்த திங்கள்கிழமை நடந்த கலவரத்திற்குப் பின்னர், சுபாங் ஜெயா, சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் கிட்டத்தட்ட வழக்கமான நிலைக்குத் திரும்பியுள்ளது என்று போலீஸ் படைத் தலைவர் முகம்மட் பூஸி ஹருண் கூறுகிறார்.

நேற்று, சில கும்பல்கள் அங்கே கூடின என்றாலும், அசாம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை என்றாரவர்.

கோவில் சூழ்நிலையை பழைய நிலைக்குக் கொண்டுவர போலீசார் கடுமையாக உழைத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் அவர்களுடைய உணர்வுகளையும் கருத்துகளையும் கட்டுப்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புவதாக அவர் கூறினார்.

நெருக்கட்டியை உருவாக்கக்கூடிய அறிக்கைகள் எதனையும் அவர்கள் வெளியிட மாட்டார்கள் என்று நம்புவதகாவும் அவர் மேலும் கூறினார்.

விசாரணைக்கு உதவுவதற்காக இன்று காலை வரையில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

100 ஆண்டுகாலத்திற்கு மேற்பட்ட அக்கோவில் இடம் மாற்றவது பற்றிய பிரச்சனை காரணமாக கடந்த திங்கள்கிழமை அதிகாலை மணி 2.30-க்கு கோவில் வளாகத்தில் கலவரம் மூண்டது.