அஸ்மின்: பெர்சத்துவில் சேர்ந்த முன்னாள் அம்னோ எம்பிகள் ‘திருந்தியவர்கள்’

முன்னாள் அம்னோ எம்பிகள் எழுவரைக் கட்சி உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள பெர்சத்து முடிவு செய்திருப்பதைத் தற்காத்துப் பேசிய பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, அவர்கள் அனைவரும் தவறுகளை உணர்ந்து திருந்தியவர்கள் என்றார்.

“அவர்கள் திருந்தி விட்டார்கள். பொதுவாக, மனிதர்கள் தவறு செய்வது இயல்புதானே.

“இனி, அவர்கள் பக்கத்தான் ஹரப்பானுக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

“என்னைப் பொருத்தவரை, ஹரப்பான் போராட்டங்களை ஏற்றுக்கொள்பவர்களை நானும் ஏற்றுக்கொள்வேன்”, என்று அஸ்மின் கூறியதாக எப்எம்டி இணையச் செய்தித் தளம் கூறிற்று.

அம்னோவிலிருந்து வெளியேறி வந்தவர்களை பெர்சத்து ஏற்றுக்கொள்வதை ஹரப்பான் தலைவர்கள் சிலர் குறைகூறியுள்ள வேளையில் அஸ்மின் இவ்வாறு கூறியுள்ளார்.