பத்துமலை ஆலய அதிகாரி ஒருவர் கைது

நேற்றிரவு மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) அதிகாரிகள் பத்துமலை ஸ்ரீசுப்ரமணியர் ஆலய அதிகாரி ஒருவரின் வீட்டைச் சோதனையிட்டதுடன் அந்த அதிகாரியையும் கைது செய்தனர்.

எம்ஏசிசி அதிகாரிகள் இரவு மணி 7.45க்கு கோட்டா டமன்சாராவில் உள்ள அந்த வீட்டுக்குச் சென்றதாகவும் குறிப்பிட்ட நபரை விசாரணைக்கு இட்டுச் சென்றதாகவும்  தெரிகிறது.

எம்ஏசிசி-யைத் தொடர்பு கொண்டு விசாரித்ததில் சோதனை நடத்தப்பட்டதும் கைது நடவடிக்கை நடந்ததும் உண்மைதான் என்பது உறுதியாயிற்று.

இதனிடையே, த ஸ்டார் பத்து மலை ஆலய அலுவலகத்தையும் எம்ஏசிசி சோதனையிட்டதாகக் கூறியது.

நில விற்பனை தொடர்பாக சோதனை நடத்தப்பட்டதென நம்பப்படுவதாக அது கூறிற்று.