மீண்டும் வீதி பேரணியா!

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பக்காத்தான் ஹராப்பன் அரசாங்கம் சில முக்கிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவில்லை என்றால், மக்கள் மீண்டும் “வீதிக்குச் செல்வார்கள்” என்று முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறினார்.

“இவற்றில் சில ஏற்கனவே வரைவு செய்யப்பட்டுள்ளன. இந்த விஷயங்களை ஜூன் மாதத்திற்குள் செயல்படுத்த முடியாவிட்டால், இது பக்காத்தான் ஹராப்பனின், மாற்றத்திற்கான உறுதிப்பாட்டின் மொத்த தோல்வியாகும்”.

“இந்த அரசாங்கம் தொடர்பாக வீதிகளில் போராட்ட பேரணி செல்ல வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், அதைச் செய்ய வேண்டுமானால், செய்து தான் ஆக வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.