பேராக் அரசாங்கம் கவிழ்கிறது

பேராக் அரசாங்கம் கவிழ்கிறது

பெர்சத்து, அம்னோ மற்றும் பாஸ் அடங்கிய புதிய ஆளும் கூட்டணியை உருவாக்க பேராக் மாநிலம் ஒப்புக் கொண்டுள்ளதாக பேராக் மந்திரி புசார் அஹ்மத் பைசல் அஸுமு அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 24ம் தேதி பக்காத்தான் ஹராப்பான் அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து பெரிகாத்தான் நேஷனல் (பி.என்) கையில் விழும் மூன்றாவது மாநில அரசு இதுவாகும்.

இன்று காலை ஈப்போவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கோலா குராவிற்கான பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில எக்ஸோ அப்துல் யூனுஸ் ஜமாஹ்ரி மற்றும் முன்னாள் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் நோலி ஆஷிலின் முகமது ராட்ஸி ஆகியோர் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்கள் பெர்சத்துவுடன் இணைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, 59 இடங்களைக் கொண்ட மாநில சட்டசபையில் 32ஐ பி.என் இப்போது கைப்பற்றியிருக்கிறது, ஹராப்பான் 27 இடங்களை வத்துள்ளது.