நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது மெதுவோட்டம் ஓடிய இருதயநோய் நிபுணர் மீது குற்றச்சாட்டு

நடமாட்டக் கட்டுப்பாட் உத்தரவின் போது பொது பூங்காக்களில் ஜாகிங் (மெதுவோட்டம்) ஓடியதன் விளைவாக, இருதயநோய் நிபுணர் டாக்டர் ஓங் ஹீன் டீக் இரண்டு குற்றச்சாட்டுக்களில் பினாங்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

சின் செவ் டெய்லி அறிக்கையின்படி, தண்டனைச் சட்டத்தின் (Kanun Keseksaan) பிரிவு 186 மற்றும் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் (நோய்த்தொற்றின் உள்ளூர் பகுதிக்குள் நடவடிக்கைகள்) (Peraturan-Peraturan Pencegahan dan Kawalan Penyakit Berjangkit (Langkah-Langkah Di Dalam Kawasan Tempatan Jangkitan)) 2020இன் விதிமுறை 3 (1) இன் கீழ் இரு குற்றச்சாட்டுகளிலும் டாக்டர் ஓங் விசாரிக்கப்படுவார்.

பிரிவு 186 அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது RM10,000 அபராதம் அல்லது இரண்டும் தண்டனை விதிக்கப்படும்.

அதேசமயம், விதி 3(1) அதிகபட்சமாக RM1,000 அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் தண்டனை விதிக்கப்படும்.

அண்மையில் டாக்டர் ஓங் கைது செய்யப்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் RM13,000 ஜாமீனை அனுமதித்து ஜூன் 9ஐ வழக்கு விசாரணைக்கு பதிவுசெய்தார்.

60 வயதான அம்மருத்துவர் தனது பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கும்படியும் ஒவ்வொரு மாதமும் காவல் நிலையத்திற்கு வருமாரும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றப்பத்திரிகையின் படி, டாக்டர் ஓங் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ஜாகிங் ஓட வெளியே சென்று, பினாங்கு நகராட்சி அதிகாரிகளுடன் வாதிட்டுள்ளார். அவரது நடவடிக்கைகள் தவறானது அல்ல என்றும் அவர் தனது சொந்த ஆரோக்கியத்திற்காக அப்படி செய்தார் என்றும் வாதிட்டார்.

கோவிட்-19 பரவலை தடுக்க மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை நாடு தழுவிய அளவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அரசாங்கம் செயல்படுத்துகிறது. பின்னர் இந்த உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையில், பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், அதிகாரிகள் இன்னும் தீர்க்கமான நடவடிக்கை எடுத்த போதிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை புறக்கணிப்பவர்கள் இன்னும் பலர் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று, இந்த குற்றத்திற்காக 649 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.