BNM: வீட்டு விலைகள் இன்னும் மிகவும் அதிகமாகவே உள்ளன

மலேசியாவில் வீட்டு விலைகள் வருமானத்துடன் ஒப்பிடும்போது இன்னும் மிகக் அதிகமான மட்டத்தில் உள்ளன. வீடுகளின் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையிலான பொருந்தாத தன்மை தொடர்ந்து இருக்கிறது.

இன்று வெளியிடப்பட்ட பேங்க் நெகாரா மலேசியா தனது அறிக்கையில் (இரண்டாம் பாதி 2019) வீடுகளுக்கு குறிப்பாக RM500,000க்கு குறைவாக உள்ள சொத்துக்களுக்கு வலுவான தேவை இருப்பதால், வீட்டின் விலையில் திருத்தம் செய்வதற்கான முயற்சிகள் குறைக்கப்படும் அபாயமும் உள்ளது என்று கூறியுள்ளது.

2019ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், அவ்வாறான சொத்து பரிவர்த்தனை மொத்த பரிவர்த்தனைகளில் 83 சதவீதமாகும்.

மலிவு விலை வீடுகளின் தேவை தொடர்ந்து வருவதால், மலேசியாவில் வீட்டின் விலை 2019 மூன்றாம் காலாண்டில் தொடர்ந்து மிதமாக உயர்ந்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டின் முதல் பாதியில் சிறப்பாக செயல்பட்ட பின்னர் வீட்டு விற்பனை சந்தை செயல்பாடு இன்னும் தொடர்ந்து வலுவாகவே இருக்கிறது.

இந்த முன்னேற்றங்கள் 2019ஆம் ஆண்டில் அரசாங்கமும் தனியார் துறையும் வீடு வாங்கலை ஆதரிப்பதற்காக அறிமுகப்படுத்திய பல்வேறு முயற்சிகளின் விளைவாகும். இதில் வரி விலக்கு (pengecualian duti setem) மற்றும் வீடமைப்பாளர்கள் வழங்கும் தள்ளுபடிகள் ஆகியவை அடங்கும்.

2019 முழுவதும், வீட்டுவசதி சந்தை பரிவர்த்தனைகளின் அளவு வலுவாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, வருமான வளர்ச்சி, புதிய வீட்டு உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஒரு வீட்டை சொந்தமாகக் கொண்டுவருவதற்கான செலவைக் குறைப்பதற்கான பல்வேறு முயற்சிகள் ஆகியவை 2019ஆம் ஆண்டில் வீட்டுவசதி தேவைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கின்றன.

மலிவு வீட்டுவசதிக்கான தேவை தொடர்ந்து ஒரு பெரிய வித்தியாசத்தில், விநியோகத்தை விட அதிகமாகவே உள்ளது. இது மேலும், குறிப்பாக புதிய வீட்டு விலை மாற்றங்களுக்கு இன்னும் இடமுண்டு என்பதைக் குறிக்கிறது.

ஆனால், வீட்டுவசதி விநியோகத்தை மீண்டும் சமநிலைப்படுத்தும் முயற்சிகள் திருப்திகரமாக இல்லை.

வலுவான உள்நாட்டு தேவை இருந்தபோதிலும் சமீபத்திய ஆண்டுகளில் RM300,000க்கும் குறைவான விலையில் புதிதாக தொடங்கப்பட்ட குடியிருப்பு சொத்துக்களின் சராசரி அளவு குறைந்துள்ளது.

மத்திய வங்கியின் கூற்றுப்படி, இப்படிப்பட்ட புதிய வீடுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இது முந்தைய போக்கை மாற்றுவதாகவும் சமீபத்திய தகவல்கள் காட்டுகின்றன. இந்த போக்கு தொடர்ந்தால், எதிர்கால விலை மாற்றங்கள் மீண்டும் உயரக்கூடும்.