தமிழில் இ-பதாகைகள்: அரசியலாக்க வேண்டாம் என்கிறது ம.இ.கா. இளைஞர் அணி

ஆர்.டி.எம்.-மின் 74வது ஆண்டுவிழாவை ஒட்டி தமிழ் எழுத்தை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணனின் விளம்பர பதாகையை தற்காத்து பேசியுள்ளது ம.இ.கா. இளைஞர் அணி.

சாதாரண விஷயங்களிலும் அரசியலை திணிக்க வேண்டும் என்று ம.இ.கா. இளைஞர் அணி தலைவர் ஆர்.தினாளன் விமர்சகர்களை வலியுறுத்தினார்.

“கோவிட்-19 பாதிப்பின் சவாலை மக்களும் நாடும் எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் அற்பமான பிரச்சினைகளுக்காக அரசியல் விளையாட்டை ஆட வேண்டாம்” என்று அவர் கூறினார்.

தமிழில் மொழிபெயர்ப்புகள் இருப்பதாக சிலர் விமர்சித்த ஒரு குறிப்பிட்ட இ-போஸ்டரைக் குறிப்பிடுகையில் அவர் இதைக் கூறுயுள்ளார்.

ஏப்ரல் 1ம் தேதி, தேசிய ஒளிபரப்பு அமைப்பான RTM-ன் 74வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, ம.இ.கா. துணைத் தலைவர் சரவணன் மலாய் மற்றும் தமிழ் மொழி அடங்கிய ஒரு இ-போஸ்டரைப் பயன்படுத்தி வாழ்த்தியுள்ளார்.

இதற்கிடையில், அதில் உள்ள தமிழ் உபயோகம், மலாய் மொழியின் மொழிபெயர்ப்பு மட்டுமே என்று தினாளன் கூறினார்.

“அதில் மலாய் மொழிக்கு முன்னுரிமை அளித்து, தமிழ் ஒரு நேரடி மொழிபெயர்ப்பாக மட்டுமே உள்ளது”.

“இது மலேசிய கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதாகவும், மனிதவள அமைச்சரின் அலுவலகத்திற்கு இந்த விஷயத்தில் எந்த வேறுபட்ட நோக்கமும் இல்லை என்பது தெளிவாகிறது” என்று அவர் இன்று ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

முன்னதாக, பாஸ் கட்சியின் கூட்டணியான பெர்ஜாசா (Berjasa), சமூக ஊடகங்களின் அதிகாரப்பூர்வ செயலில் தமிழ் மொழியை பயன்படுத்துவது அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 152-ன் கீழ், தேசிய மொழியாக இருக்கும் மலாய் மொழியின் நிலையை அத்துமீறல் செய்வதாகும், என்றுள்ளது.

“இது மலாய் மொழியின் அடையாளத்தை சவால் செய்கிறது”.

“தமிழில் எழுதுவது, தாங்கள் எந்த நாட்டில் வசிக்கிறார்கள் என்று தெரியாது என்பதன் பிரதிபலிப்பாகும்” என்று பெர்ஜாசாவின் ஜமானி இப்ராஹிம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒரு மலேசிய குடிமகன் விழிப்புடன் இருக்க வேண்டும். எல்லா இனமும், இஸ்லாமியம், மலாய்க்காரர்கள் மற்றும் அரச நிறுவனம் ஆகிய உள்நாட்டு அடையாளத்தை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.