குவாந்தான் சிவப்பு மண்டல பகுதியாக மாறியுள்ளது

கோவிட்-19 சிவப்பு மண்டல பகுதி 24 இடங்களாக அதிகரித்துள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இது நேற்று நண்பகல் நிலவரப்படி ஏற்பட்ட மாற்றமாகும்.

மலேசியா சுகாதார அமைச்சின் முகநூல் (பேஸ்புக்) பதிவின்படி, சமீபத்திய சிவப்பு மண்டலம் குவாந்தான் பகுதி ஆகும்.

“வீட்டில் இருங்கள், கூடல் இடைவெளியை கடைபிடியுங்கள், தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுங்கள்” என்று அப்பதிவு மேலும் கூறியுள்ளது.