கோவிட்-19: 59.3 சதவீதம் குணமடைந்துள்ளனர், 84 புதிய பாதிப்புகள், 1 இறப்பு

இந்த வாரம் நான்காவது முறையாக, மலேசியாவில் கோவிட்-19 தினசரி பாதிப்பு, 100க்கும் கீழே பதிவாகியுள்ளது.

இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நண்பகல் வரை 84 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்றுள்ளார்.

இது மலேசியாவில் பதிவான மொத்த கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை 5,389 ஆக கொண்டுவந்துள்ளது.

குணமடைந்த 59.3 சதவீதம் அல்லது 3,197 நோயாளிகளின் எண்ணிக்கையை (இன்று குணமடைந்த 95 நோயாளிகள் உட்பட) கருத்தில் கொண்டு, மலேசியாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகள் 2,103 ஆகும்.

இதில், 146 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) இருக்கின்றனர். அவற்றில் 26 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

எவ்வாறாயினும், இன்று மதியம் நிலவரப்படி மற்றொரு புதிய இறப்பு பதிவாகியுள்ளது. இதனால் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது.