லிம்: நாடாளுமன்றத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கவும்

டி.ஏ.பி. தலைவர் லிம் கிட் சியாங், நாடாளுமன்றத்தை ஒரு முக்கிய சேவையாக அறிவிக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.

மே 18 அன்று பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் திறப்பு ஆணையை தொடர்ந்து, 10 நாள் மெய்நிகர் (virtual) நாடாளுமன்ற அமர்வை மேற்கொள்ளுமாறும் அந்த இஸ்கந்தார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் முன்மொழிந்தார்.

இதுவரை நாடாளுமன்ற அமர்வு அந்த தேதியில் ஒரு நாள் மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு ஏப்ரல் 28க்கு பிறகு நீட்டிக்கப்படுமா என்பதைப் பொருட்படுத்தாமல் நாடாளுமன்றத்தை ஒரு முக்கியமான சேவையாக அறிவிக்க வேண்டும் என்று லிம் கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்க நாடாளுமன்றம் ஒரு அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட வேண்டும்”.

“மேலும் நெருக்கடி காலங்களில் தேசிய ஒற்றுமையையும் ஒறுமைப்பாடையும் ஊக்குவிப்பதற்காக இதைச் செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.