கோவிட்-19: மலேசியாவில் 5 பகுதிகள் மட்டுமே சிவப்பு மண்டலத்தில் உள்ளன

கடந்த வாரத்தில், மலேசியாவின் பெரும்பாலான மாநிலங்கள் பச்சை மண்டலமாக மாறியுள்ளதைக் காட்டுகிறது.

சுகாதார அமைச்சினால் கண்காணிக்கப்படும் கிட்டத்தட்ட 1,200 பகுதிகளில், இப்போது ஐந்து மட்டுமே 40க்கும் மேற்பட்ட செயலில் உள்ள பாதிப்புக¨ளை கொண்டுள்ளன.

செயலில் உள்ள பாதிப்புகள் ஏதும் இன்றி, 75 சதவிகித பகுதிகள் பச்சை மண்டலமாக உள்ளன.

பேராக், கெடா, பினாங்கு, பெர்லிஸ், திரங்கானு மற்றும் கிளந்தான் மாநிலங்களில், சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலங்களாக குறிக்கப்பட்ட பகுதிகள் ஏதும் இல்லை. இந்த மாநிலங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 20-க்கும் குறைந்தே பாதிப்புகள் உள்ளன.

சிவப்பு மண்டலம் 40க்கும் மேற்பட்ட செயலில் உள்ள பாதிப்புகளைக் குறிக்கிறது, அதே நேரத்தில் ஆரஞ்சு மண்டலம் 20க்கும் மேற்பட்டது செயலில் உள்ள பாதிப்புகளைக் குறிக்கிறது.
ஒன்று முதல் 20 செயலில் உள்ள பாதிப்பைக் கொண்ட பகுதிகள் மஞ்சள் மண்டலமாகவும், பச்சை மண்டலம் பூஜ்ஜிய செயலில் உள்ள பாதிப்பைக் கொண்ட பகுதிகளாகவும் உள்ளன.

ஏப்ரல் 25, 2020 நிலவரப்படி மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செயலில் உள்ள பாதிப்புகளின் தகவல்களின்படி, நாடு முழுவதும் ஐந்து பகுதிகள் மட்டுமே சிவப்பு மண்டலத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. அதாவது ஜோகூரில் உலு பெனுட், நெகேரி செம்பிலனில் உள்ள லாபு, சரவாக்கில் கூச்சிங் மற்றும் சமராஹான் மற்றும் சிலாங்கூரில் ஹுலு லங்காட் ஆகும்.

கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகியவற்றைத் தவிர, மாநில சுகாதாரத் துறைகளால் தினசரி தரவு தனித்தனியாக வெளியிடப்படுகிறது.

கூச்சிங், கோத்தா சமராஹான், கிள்ளான் பள்ளத்தாக்கு தொற்று மையங்கள்

நேற்றைய தகவலின்படி, புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்ட பகுதிகள் – சரவாக்கில் மீரி (ஒரு புதிய பாதிப்பு), கூச்சிங் (ஐந்து) மற்றும் கோட்டா சமராஹான் (மூன்று) மற்றும் கோலாலம்பூரில் உள்ள மாவட்டங்கள் மட்டுமே.

கோலாலம்பூரின் சுகாதாரத்துறை எந்த நேரடி தரவையும் வெளியிடவில்லை.

எவ்வாறாயினும், கோலாலம்பூரில் ஏப்ரல் 25 ஆம் தேதி நண்பகல் நிலவரப்படி 39 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். ஓர் இறக்குமதி பாதிப்பு, மேலும் 23 பாதிப்புகள் சிலாங்கூர் மேன்ஷனிலும், மலையன் மேன்ஷனிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று பாதிப்புகள் மஸ்ஜித் இந்தியாவின் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.

மஸ்ஜித் இந்தியா பகுதி லெம்பா பந்தாய் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள பெரும்பாலான பாதிப்புகள் அந்நிய/வெளிநாட்டு நோயாளிகளை உள்ளடக்கியது.

ஏப்ரல் 24 ஆம் தேதி, சரவாக், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகியவை அதிக புதிய பாதிப்புகளைப் பதிவு செய்தன.