பெந்தோங் மஞ்சள் மண்டலம், நான்கு மாநிலங்கள் கோவிட்-19 பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்கள்

சுகாதார அமைச்சு வழங்கிய தரவுகளின்படி, கோவிட்-19 இல்லாத பச்சை மண்டல பகுதிகளின் எண்ணிக்கை 91 ஆக குறைந்துள்ளது.

செயலில் உள்ள கோவிட்-19-இன் புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் பெந்தோங் இப்போது மஞ்சள் மண்டலமாக மாறியுள்ளது.

மஞ்சள் மண்டலம், ஒன்று முதல் 40 செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளைக் கொண்ட பகுதியைக் குறிக்கிறது. சிவப்பு மண்டலம் என்றால் அந்த பகுதியில் 40க்கும் மேற்பட்ட செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகள் உள்ளன.

இந்த சமீபத்திய வளர்ச்சி, மஞ்சள் மண்டலங்களின் எண்ணிக்கையை 58 ஆகக் கொண்டுவருகிறது.

சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை எட்டு ஆகும்.

தற்போதைய சிவப்பு மண்டலங்கள் – லெம்பா பந்தாய் (258 செயலில் உள்ள பாதிப்புகள்), கூச்சிங் (143), கெப்போங் (84), தீத்திவாங்சா (74), குளுவாங் (70), கோத்தா சமராஹான் (54), ஜொகூர் பாரு (46), மற்றும் ஹுலூ லாங்காட் (50).

பேராக், பெர்லிஸ், கெடா, கிளந்தான் ஆகிய நான்கு மாநிலங்கள், செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகள் இல்லாதவையாகும். இங்கு அனைத்து நோயாளிகளும் குணமடைந்து மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று நண்பகல் நிலவரப்படி, நாட்டில் 6,071 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன மற்றும் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும், அவர்களில் 4,210 பேர் மீண்டுள்ளனர், 1,758 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.