பி.கே.பி. மீறல்: ஜாஹிட் ஹமிடியின் மகளுக்கு RM800 அபராதம்

ஏப்ரல் 20 ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியக் குற்றத்திற்காக அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் மகள் நூருல்ஹிடாயா மற்றும் அவரது கணவர் சைபுல் நிஜாம் முகமட் யூசோப்புக்கும் தலா RM800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நூருல்ஹிடாயா மற்றும் சைபுல் நிஜாம் ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து மாஜிஸ்திரேட் ஷா விரா அப்துல் ஹாலீம் இந்த முடிவை எடுத்தார்.

தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் (பாதிக்கப்பட்ட உள்ளூர் தொற்று பகுதிகளுக்குள் நடவடிக்கைகள்) 2020 விதிமுறைகளை மீறியதாக இந்த ஜோடி மீது புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

குற்றப்பத்திரிகையின் படி, ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 9 மணியளவில், நூருல்ஹிடாயா மற்றும் அவரது கணவர், காஜாங்கில் இருந்து புத்ராஜெயாவில் உள்ள சுற்றுச்சூழல் துறைக்கு சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த இடம், தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துதல் (தொற்றுநோய்களின் உள்ளூர் பகுதியில் நடவடிக்கைகள்) 2020 இன் கீழ் உள்ள பகுதியாகும்.

ஆகையால், தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துதல் (தொற்றுநோய்களின் உள்ளூர் பகுதியில் நடவடிக்கைகள்) 2020, விதிமுறை 3 (1) இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் அதிகபட்சமாக RM1,000 அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று துணை அரசு வக்கீல் நூராஷிகின் மொக்தார் கேட்டுக்கொண்டார்.

சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அகமட் மஸ்ரிசல் முகமதுவின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக அவர்களின் வழக்கறிஞர் அகமட் ஜைதி ஜைனல் வாதிட்டார்.

இதனிடையே, நூருல்ஹிடாயா மற்றும் சைபுல் நிஜாம் ஆகியோருக்காக எதிராக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 269 இன் கீழ் – எந்தவொரு உயிருக்கும் ஆபத்தான நோயை தொற்றக்கூடிய கவனக்குறைவான செயல்களுக்காகவும் – மற்றும் தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துதல் (தொற்றுநோய்களின் உள்ளூர் பகுதியில் நடவடிக்கைகள்) 2020 விதிகளின் 3 (1) இன் கீழ் – அனுமதிக்கப்படாத நடமாட்டத்திற்காக விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.