16 புதிய பாதிப்புகள், 2 மாதங்களில் மிகக் குறைவான பதிவு

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நண்பகல் வரை 16 புதிய கோவிட்-19 பாதிப்புகள் உள்ளன என்றும், இது இரண்டு மாதங்களில் மிகக் குறைவான பதிவு ஏன்றும் கூறியுள்ளார்.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை அமல்படுத்துவதற்கு முன்பு தான் மலேசியா இவ்வளவு குறைந்த பாதிப்பை பதிவு செய்திருந்தது. அடுத்த மிகக் குறைந்த பாதிப்புகள் மார்ச் 12 அன்று ஒன்பதாக இருந்தன.

இன்று 16 புதிய பாதிப்புகளில் ஒன்பது பாதிப்புகள் வெளிநாட்டினருடன் தொடர்புடையது என்று நூர் ஹிஷாம் கூறினார்.

“இன்று பதிவாகியுள்ள 16 புதிய பாதிப்புகளில், மூன்று இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 13 உள்ளூர் பாதிப்புகள்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

110 நோயாளிகள் மீட்கப்பட்டு இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,223 ஆகவும், இது மொத்த எண்ணிக்கையில் 77.5 சதவீதமாகவும் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 1,410 ஆகும்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) மொத்தம் 16 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் மூன்று பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

கோவிட்-19 நோயாளிகள் சம்பந்தப்பட்ட புதிய இறப்புகள் எதுவும் இன்று பதிவாகவில்லை.