நாடாளுமன்றத்தின் புதிய நிகழ்ச்சி நிரல் மே 18 நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்தது

மே 18 அன்று நாடாளுமன்றத்தின் ஒரு நாள் அமர்வுக்கான அறிவிப்பு கடிதத்தில் இப்போது ஒரே ஒரு நிகழ்ச்சி நிரல் மட்டுமே உள்ளது – அது, பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் உரை மட்டுமே. இறுதியில் இது பிரதமர் முகிதீன் யாசினின் அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிக்கான கதவை மூடியுள்ளது.

சபாநாயகர் முகமட் ஆரிஃப் முகமட் யூசோப் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். சபைத் தலைவராக இருக்கும் பட்சத்தில், அவர் முகிதீனிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றுள்ளதாகக் கூறினார். நாட்டில் தொடர்ந்து கோவிட்-19 பாதிப்பின் காரணமாக, நாடாளுமன்றம் காலை 10 மணிக்கு பேரரசரின் தொடக்கத்திற்கு மட்டுமே கூடும் என்றும், பின் அது உடனடியாக முடிவடையும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.