கோவிட்-19: 47 புதிய பாதிப்புகள், இறப்புகள் இல்லை

இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 47 புதிய கோவிட்-19 நோயாளிகள் இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இது மலேசியாவில் மொத்த கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை 6,941 ஆகக் கொண்டுவருகிறது.

புதிய பாதிப்புகளில்,  21 பாதிப்புகள் வெளிநாட்டில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகள், இறக்குமதி செய்யப்பட்டவை என்றும், 26 உள்நாட்டு பாதிப்புகள் மற்றும் அதில் 17 மலேசியர்கள் அல்லாதவை என்றார் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம்.

“44 பாதிப்புகள் மீட்கப்பட்டு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டன. குணப்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த எண்ணிக்கை இப்போது 5,615 ஆகும்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் ஒரு ஊடக மாநாட்டில் கூறினார்.

எந்த இறப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் அறிவித்தார்.