கோவிட்-19: 15 புதிய பாதிப்புகள், மலேசியர் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொற்று இல்லை

நாட்டில் மலேசிய குடிமக்கள் சம்பந்தப்பட்ட கோவிட்-19 பாதிப்புகள் எதுவும் இன்று பதிவாகவில்லை என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இன்று நண்பகல் வரை, 15 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது மலேசியாவில் மொத்த நேர்மறை கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,587 ஆகக் கொண்டு வந்துள்ளது.

“புதிய பாதிப்புகளில், மலேசிய குடிமக்களை உள்ளடக்கிய இரண்டு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு நோய்த்தொற்றுகள். அதே நேரத்தில் 13 உள்ளூர் நோய்த்தொற்றுகள் மலேசிய குடிமக்கள் அல்லாதவையாகும்.”

டாக்டர் நூர் ஹிஷாம் கோவிட்-19 இலிருந்து 21 நபர்கள் மீண்டு வந்ததாகவும், இன்று அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். இது மொத்த குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கையை 8,177 அல்லது மொத்த பாதிப்புகளில் 95.2 சதவீதமாகக் கொண்டுவருகிறது.

எனவே, கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 289 ஆகும்.

“அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.

இன்று இறப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை என்றும், மொத்த இறப்பு 121 பேர் அல்லது மொத்த பாதிப்புகளில் 1.41 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) தற்போது இரண்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் யாருக்கும் சுவாச உதவி தேவையில்லை என்றும் அவர் கூறினார்.