கோவிட்-19: 12 புதிய பாதிப்புகள், 7 தாவார் திரளை பாதிப்புகள்

கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான மேலும் 12 புதிய பாதிப்புகள் இன்று பிற்பகல் வரை பதிவாகியுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு (MOH) தெரிவித்துள்ளது. இதில் 10 உள்நாட்டு நோய்த்தொற்றுகள் மற்றும் இரண்டு இறக்குமதி பாதிப்புகள் உள்ளன.

இதுதொடர்பாக, சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை தற்போது 211 என்றும் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 9,212 என்றும் கூறினார்.

நாட்டில் தொற்று ஏற்பட்ட 10 பாதிப்புகளில், ஏழு பாதிப்புகள் தாவார் திரளையைச் சேர்ந்தவை – அதாவது கெடாவில் நான்கு, பினாங்கில் மூன்று, மற்ற இரண்டு பாதிப்புகள் கெடா, சாலா மூடா திரளையிலிருந்து கண்டறியப்பட்டன.

“இதனால் தாவார் திரளையில் கண்டறியப்பட்ட நேர்மறையான கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 46 ஆகும்,” என்றார்.

சிலாங்கூரின் சுங்கை புலோ மருத்துவமனையில் மற்றொரு உள்ளூர் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

இரண்டு இறக்குமதி பாதிப்புகள் சிரியா மற்றும் பிலிப்பைன்ஸிலிருந்து வந்தவை என்றும், இவை இரண்டும் கோலாலம்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

“தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) எட்டு நேர்மறை பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன, இதில் இரண்டு பாதிப்புகளுக்கும் சுவாச உதவி தேவைப்படுகிறது.”

“கோவிட்-19 தொடர்பான இறப்பு அதிகரிப்பு இன்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.”

“எனவே, மலேசியாவில் கோவிட்-19 இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 125 அல்லது மொத்த பாதிப்புகளில் 1.36 சதவிகிதமாக உள்ளது” என்று அவர் கூறினார்.