பி.கே.பி.பி. : நள்ளிரவு 12 வரை வணிகங்கள் செயல்பட அனுமதி

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி.) அமலில் இருக்கும் மாநிலங்களில், உணவகங்கள் மற்றும் பல்வகைப் பொருள் விற்பனைக் கடைகள் உட்பட, இன்று தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தை மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

இஸ்மாயில் கருத்துப்படி, உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் புகார்களைத் தொடர்ந்து தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்) இம்முடிவை எடுத்துள்ளது, தற்போது இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

“நான் பொதுமக்களிடமிருந்து நிறைய புகார்களைப் பெறுகிறேன், உணவகச் சங்கங்களும் புகார்களைச் செய்கின்றன, குறிப்பாக, முஸ்லீம் சமூகத்திற்கு, அவர்கள் வழக்கமாக இஸ்ஷாக் நேரத்திற்குப் பிறகு வெளியே செல்கிறார்கள், (அதாவது) இரவு ஒன்பது மணிக்கு.

“வர்த்தகர்கள் மீதான தாக்கம் (நடமாட்ட நேர வரம்பு) உண்மையில் அதிகமாக உள்ளது.

“விவாதங்களுக்குப் பிறகு, உணவகங்களையும் பிற வர்த்தகங்களையும் நள்ளிரவு 12 மணி வரை அனுமதிக்க ஒப்புக்கொண்டுள்ளோம்,” என்று அவர் கூறினார், புதிய விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.