தாமஸ்சுக்கு எதிராக அடிப்’பின் தந்தை தாக்கல் செய்த வழக்கில், ஏ.ஜி.சி. பிரதிநிதிக்கும்

முன்னாள் அட்டர்னி ஜெனரலுக்கு (ஏஜி) எதிராக தீயணைப்பு வீரர் முஹம்மது அடிப் மொஹமட் காசிம்மின் தந்தை தாக்கல் செய்த வழக்கில், அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் (ஏஜிசி) தொடர்ந்து தோமி தாமஸைப் பிரதிநிதிக்கும்.

மொஹமட் காசிம் அப்துல் ஹமீத்தைப் பிரதிநிதிக்கும், வழக்கறிஞர் மொஹமட் ஹனிஃப் காத்ரி அப்துல்லா, தனது வாடிக்கையாளர் அனுப்பிய பிரதிநிதித்துவத்திற்குப் பதிலளிக்கும் விதமாக ஏ.ஜி.சி. இந்த நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தியுள்ளது என்றார்.

ஏ.ஜி.சி தவிர, தாமஸை வக்கீல் அம்பிகா சீனிவாசனும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

மேல்முறையீட்டை விசாரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளதாக முகமது ஹனிஃப் கூறினார்.

மரணதண்டனை நீதிமன்றத்தின் அதிகார வரம்பில், காலவரையறைக்கு மேல் முறையீடு செய்வதற்கான விண்ணப்பத்தையும் ஏ.ஜி.சி சமர்ப்பித்ததாக அவர் கூறினார்.

“ஏஜிசி விண்ணப்பத்தை விசாரிக்க நீதிமன்றம் டிசம்பர் 17-ஐ நிர்ணயித்துள்ளது,” என்று அவர் புலனம் மூலம் கூறினார்.

கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மொஹட் காசிம் மேல்முறையீட்டைத் தாக்கல் செய்தார்.