3,048 புதிய நேர்வுகள், இரண்டு வாரங்களில் நிலைமை நிலையாகும் என்று சுகாதார அமைச்சு நம்பிக்கை

கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,048 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய பாதிப்புகள் இந்த 11 நாட்களில் குறைந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை “நிலையாகும்” என்று சுகாதார அமைச்சு நம்புகிறது.

இதற்கிடையில், இன்று 11 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆக, நாட்டில் இதுவரை இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 689.

3,638 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 261 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 101 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

லாபுவானில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- சிலாங்கூர் (1,035), ஜொகூர் (529), சபா (348), கோலாலம்பூர் (305), சரவாக் (120), பினாங்கு (110), பேராக் (103), நெகிரி செம்பிலான் (95), மலாக்கா (90), கிளந்தான் (89), திரெங்கானு (79), கெடா (74), பஹாங் (46), புத்ராஜெயா (22), பெர்லிஸ் (3).

மேலும் இன்று 13 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 8 திரளைகள் பணியிடம் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.